தேவாலய உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் 26 நபர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் 11 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள்,கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் 26 நபர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் 11 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள், மாநில கிறித்துவ மற்றும் உபதேசியர் நல வாரிய உறுப்பினர் திருமதி.ரோஸ்லின் ஜீவா அவர்கள் முன்னிலையில் இன்று வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை முதற்கட்டமாக 26 நபர்களுக்கும்
கிறித்துவ மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரால் ஏற்பளிக்கப்பட்ட 11 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருமதி.பத்மலதா
துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.