கிருஷ்ணகிரி: ஓசூரில் இயங்கும் tata நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

sen reporter
0

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், இராயக்கோட்டை உள்வட்டம், 68- ஊடேதுர்க்கம், 69- திம்ஜேபள்ளி தரப்பில் இயங்கி வரும் டாடா தனியார் நிறுவனத்தில் இன்று 28.09.2024 காலை 6.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறை வருவாய்த்துறை அலுவலர்கள் தீயைஅணைக்கநடவடிக்கை

மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் தீ விபத்து ஏற்பட்டுள்ள குடோனில் உள்ள தீயை அணைக்க பெங்களூர் கிருஷ்ணகிரி தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது இந்த தீ விபத்தினால் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை

மேலும் டாடா நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக ஓசூர் காவேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.காவேரி மருத்துவமனையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கே எம். சரயு இ ஆ ப. அவர்கள் நேரடியாக சென்று தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து  மருத்துவர்கள் இடம் கேட்டு அறிந்தார் உடன் ஓசூர் சார் ஆட்சியர், காவல்துறை அலுவலர்கள் மருத்துவர்கள் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top