தூத்துக்குடி:சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் 20ம் தேதி தூத்துக்குடி வருகை மாவட்ட ஆட்சியர் தகவல்!!!!
8/07/2025
0
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் வருகிற 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் உத்தரவின்படி மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வருகின்ற 20ம் தேதி (புதன் கிழமை) அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் 20.08.2025 (புதன்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் மற்றும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.அப்போது சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள்குறித்தும்,சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.