மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தலைமை செயலகத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் மாண்புமிகு நகராட்சி நிர்வாக்கத்துறை அமைச்சர் திரு.கே. என். நேரு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே. எஸ்.ஆர்.ராமசந்திரன், மாண்புமிகு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு,மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன்,மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு. அனிதாஆர்.ராதாகிருஷ்ணன்
மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் திரு.செந்தில்பாலாஜி,மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன்,மாண்புமிகுஇந்துசமயம்அறநிலையங்கள் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு,தலைமைசெயலாளர் திரு. நா. முருகாநந்தம் இ. ஆ. ப.,காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சங்கர் ஜிவால் இ. கா. ப., அரசு துறை செயலாளர்கள்,துறைத் தலைவர்கள்,காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.