திருப்பூர் பகுதி முழுவதும் தற்போது பெருகிவரும் தெரு நாய்களால் தினந்தோறும் விபத்துகளும் ஆதலால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டும் வருகின்ற நிலையில்
ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டிகளில் வீசிவிட்டு செல்வதால்கோழி கழிவுகளை உண்பதற்காக தெரு நாய்கள் நான்கு ஐந்து என்று ஒன்று கூடி கழிவுகளை உண்பதற்காக சண்டையிட்டு ரோட்டில் நடுவே வருவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி மரணமும் ஏற்பட்டு வருகிறது இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தன்னார்வலர்களும் காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளும் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை
இதுகுறித்து திருப்பூர் மாநகர கமிஷனரிடம் சென்று கேட்டபொழுது உரிய பதில் வராத நிலையில் பலமுறை அலைய விடுவதாகவும் தன்னார்வலர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுவதால் தெரு நாய்கள் பெருகி வருகின்ற நிலையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்