அப்போது பேசிய ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி சுமார் தற்போது வரை 40 மாணவர்கள் விளையாட்டு வீரருக்கான பயிற்சியையும், 100 மாணவர்கள் துவக்கநிலை முதல் இடைநிலை அளவில் பயிற்சியையும் பெற்று வருகின்றனர் என கூறினார்.பேட்மிண்டன் குருகுல்-உடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர், 7 முதல் 8 மாணவர்கள் எங்கள் அகாடமியில் இருந்து ஜூனியர் மற்றும் சீனியர் நிலை போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்துள்ளனர். 8 முதல் 9 வீரர்கள் தேசிய மற்றும் ஆசிய அளவிலான 17 மற்றும் 19 வயதுக்கு கீழானவர்களுக்கான போட்டிகளில் முக்கிய இடங்களை பெற்றுள்ளனர்," என தெரிவித்தார்.