வேலூர் மாவட்டத்திற்கு துணை ராணுவ படையினர் நேற்று வருகை புரிந்துள்ளனர்.வரும் 2026 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் 84 பேர் கொண்ட துணை ராணுவப்படை குழுவினர் மார்ச் 8ம் தேதி காட்பாடி ரயில் நிலையத்திற்கு வருகை தந்தனர். இவர்கள் தற்போது வேலூர் அரசு கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு அவர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்திற்கு துணை ராணுவப் படையினர் குழு வருகை!!!!
3/08/2026
0
