தேனி மாவட்டம் பெரியகுளத்தில், விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் அ.ஜெ.கோபிநாத் தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாண்டியராஜன், பொருளாளர் பார்த்தீபன், பள்ளி மேலான்மைக்குழுத் தலைவர் ஈஸ்வரி. துணைத்தலைவர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முன்னாள் மாணவர்கள் வி.டி.எஸ். ராஜவேல், வெங்கடேசன், கார்த்திக், முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களுமான, ஞானசேகரன். சிவசுப்பிரமணியன், செந்தில்குமார், நாகவேல் ராஜன், வட்டாரவளர்ச்சி அலுவலர் (ஓய்வு) ரவி, திமுக.முன்ளாள் நகரச் செயலாளர் எஸ்.பி.முரளி,மக்கள் நல சங்க உபதலைவர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன். ரேணுகாதேவி, சத்தியதீபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி உதவி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றியுரையாற்றினார். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். இவ்விழாவில், பள்ளியின் சார்பில் மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற, கல்வி, ஓவியம், சிற்பம், கலைநிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள், பள்ளி அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம்:பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா!!!
2/21/2025
0
தேனி மாவட்டம் பெரியகுளத்தில், விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் அ.ஜெ.கோபிநாத் தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாண்டியராஜன், பொருளாளர் பார்த்தீபன், பள்ளி மேலான்மைக்குழுத் தலைவர் ஈஸ்வரி. துணைத்தலைவர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முன்னாள் மாணவர்கள் வி.டி.எஸ். ராஜவேல், வெங்கடேசன், கார்த்திக், முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களுமான, ஞானசேகரன். சிவசுப்பிரமணியன், செந்தில்குமார், நாகவேல் ராஜன், வட்டாரவளர்ச்சி அலுவலர் (ஓய்வு) ரவி, திமுக.முன்ளாள் நகரச் செயலாளர் எஸ்.பி.முரளி,மக்கள் நல சங்க உபதலைவர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன். ரேணுகாதேவி, சத்தியதீபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி உதவி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றியுரையாற்றினார். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். இவ்விழாவில், பள்ளியின் சார்பில் மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற, கல்வி, ஓவியம், சிற்பம், கலைநிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள், பள்ளி அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
