வேலூர்:தைப்பூசத்தை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!!!
2/11/2025
0
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து தைப்பூசத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது வழங்கப்பட்டது. தைப்பூசம் என்பது முருகனுக்கு அன்னை பார்வதி வேல் வழங்கிய நாள் தைப்பூசமாக நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தைப்பூச நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்தனர்.
