தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

sen reporter
0

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆசிரியர் மன்ற தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் தங்கதுரை வரவேற்று பேசினார் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.நிகழ்ச்சியில் ஆசிரியர் மன்றம் மாநில பொருளாளர் கணேசன், வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ண பாரதி, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஜெயசிங், சுந்தரவேல்,மாநில சட்ட செயலாளர் லட்சுமி குமரன், மாவட்ட பொருளாளர் சுந்தரவேல்,ஆசிரியர் மன்ற நிர்வாகி அருள்மணி, பாஸ்கர், இளம்பரிதி,சண்முக சிங் ஆகியோர்கள் வாழ்த்தி பேசினார்கள்.நிகழ்ச்சியை மன்ற ஒன்றிய செயலாளர் ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார். மன்றத்தின் ஒன்றிய தலைவர் ராஜதுரை நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தங்க செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் தர்மராஜ் ,சங்கர், நாகராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அந்தோணி ராஜ் கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஜெகதீசன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் அருணா பேரி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், கிளைக் கழக நிர்வாகிகள் காசி பாண்டியன், சேர்மலிங்கம், முத்து பாண்டியன், மதன், ராஜசேகர், சீனி அய்யா, ஏபிஎன் குணா, ராஜபாண்டி யன், மாணவர் அணி தினேஷ் பாண்டியன், கேபிள் அஜித், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக், நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன், அருணாசலம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top