தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் புதிய பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சரிடம் கோரிக்கை!!!

sen reporter
0

தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது-தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடையநல்லூரில் இருந்து இடைகால் , ஆய்க்குடி, சாம்பவர் வடகரை, சுரண்டை, வீரகேரளம்புதூர், வீராணம், ரெட்டியார்பட்டி, காடுவெட்டி, சீதைக்குறிச்சி வழியாக மானூர் பேருந்து விட வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக பொதுமக்களிடம் இருந்து வருகிறது.இது நல்ல வழித்தடமாகவும் இருக்கிறது.

திருநெல்வேலி, ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட வழித்தடம் ஆகும்.மானூரிலிருந்து கடையநல்லூர் கடையநல்லூரில் இருந்து மானூர் ஆகிய ஊர்களுக்கு இருக்கும் இடையில் பல கிராமங்கள் பயன்படக்கூடிய வகையில் இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கினால் பொதுமக்களும் பயணிகளும் பயன்பெறுவர்.

ஆகையால் மேற்கண்ட வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.அப்போது பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கடையநல்லூர் முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் காசி தர்மம் துரை, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சீனித்துரை, கடையம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top