சென்னை: செந்தமிழ் வீர சிலம்பம் கலை கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி!!!

sen reporter
0


 செந்தமிழ் வீர சிலம்பம் கலை கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி  சென்னை கிண்டியில் உள்ள மான்போர்ட் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது இதில் , சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3000 கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்துக் கொண்டனர் இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த திருநின்றவூர் நடராஜன் சிலம்பம் கிளப் மற்றும் திருவூர் சிலம்பம் கிளப் சார்ந்த 200கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் கலந்துக் கொண்டனர் பல்வேறு வயதிற்குட்பட்டவர்களுக்கு வயது வாரியாக நடத்தப்பட்டது இதில் திருநின்றவூர் நடராஜன் சிலம்பம்  கிளம் மற்றும் திருவூர் சிலம்பம் கிளபை சார்ந்த மாணவ மாணவிகள் 102 தங்க கோப்பை உட்பட வெள்ளி வெண்கலம் என 59 கோப்பைகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்கள் நடராஜன் , ராஜா, ஜெயா, சுந்தர் ( எ ) துரைராஜ், குணா, பிரான்சிஸ், பரசுராமன் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் அவர்கள்  வாழ்த்தி  கேடயம் வழங்கியும் சால்வை அணிவித்தும்  பாராட்டினார் மேலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கை குளிக்கி பாராட்டினார் நிகழ்ச்சியில் க.வினோத்குமார் , அஸ்வின், பிரகாஷ், கவியரசி து.லோகரட்சகி. செ.லட்சுமிநரசிம்மன் ஆகியோர் வாழ்த்தி பேசினர் இதில் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top