இந்நிலையில் கோவையில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மின்சார வாரியம் நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிட்டு உள்ளது. கோவையில் வந்து உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளான வால்பாறை, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு வருவாய்த் துறையினர், முகாம்கள் அமைத்து அங்கு தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். அங்கு இருந்து மழை பாதிப்பு ஏற்பட்டால், மீட்பு பணியில் ஈடுபடுவர் பேரிடர் மீட்பு குழுவினரிடம் படகுகள், மரங்கள் வெட்டும் இயந்திரம், லைப் ஜாக்கெட், 2.5 கிலோ வால்ட் திறன் கொண்ட ஜெனரேட்டர்கள் போன்ற மீட்புப் பணிகளுக்கு ஏராளமான மீட்பு உபகரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 14 தீயணைப்பு அலுவலகங்களிலும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மின் வாரியம், நெடுஞ் சாலை துறையினரும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம்தெரிவித்துஉள்ளது. மேட்டுப்பாளையம் சென்றுள்ள மீட்பு குழுவினர் பவானி ஆற்றின் அருகே வினோபாஜி நகர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த மீட்பு படையினால் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக இந்த குழுவினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து அவர்களை காக்க இந்த குழுவினர் அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவைக்குரெட் அலர்ட் நான்கு நாட்களுக்கு பேரிடர் மீட்புடை வருகை !!!
June 13, 2025
0
ரெட் அலர்ட் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் கோவைக்குவந்துஉள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 27 வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த வீரர்களும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்து உள்ளனர். அதில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் வால்பாறை மலைப் பகுதிக்கும், மாநில பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த வீரர்கள் 25 பேர் தொண்டாமுத்தூர் பகுதிக்கும், 27 வீரர்கள் மேட்டுப்பாளையம் பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனி தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன மழை அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கையின் மற்றும் மீட்பு பணி தொடர்பாகவும், அதை சமாளிக்க தயார் நிலையில் இருக்க பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.