கோவை மாநகராட்சியில் மேயரை பேசவிடாமல் தடுத்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் !!!

sen reporter
0

கோவை, மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் தொடங்கியதும் மேயரை பேச விடாமல் அ.தி.மு.க கவுன்சிலர்கள் இடைமறித்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது .கோவை, மாநகராட்சியின் கட்டுமானம் மற்றும் கட்டிட கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக மண்டலம் வாரியாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தின் கீழ் கிழக்கு மண்டலத்தில் உள்ள சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதற்காக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 960 பேர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் நிலத்தை கிரயம் பெற்று உள்ளனர், இவ்வாறு தனியாரிடம் கிரையம் பெற்ற இடங்களில் கட்டிடக் கழிவைகளை கொண்ட அனுமதிப்பது முறையான அல்ல என்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கும் சுகாதாரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் என்று கூறி இந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என வலியுறுத்தியும் தொடர்ந்து மேயரை பேசவிடாமல் அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ராமேஷ் வாக்குவாத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும்பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு டேக்ஸ் உள்ளிட்டவை அதிகப்படுத்தப்பட்டுஇருப்பதாகவும்கடந்த 14 வருடங்களாக உள் விளையாட்டு அரங்கங்களை, மாநகராட்சி குழந்தைகள், இளைஞர்கள் போன்றவர்கள் இலவசமாக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு 45 ரூபாய் குழந்தைகளிடம் மற்றும் இளைஞர்களிடம்வசூலிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி அ.தி.மு.க கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தின் மையத்தில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top