இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அமெரிக்க பயணம் அங்கு வாழும் மக்களிடமும் இந்திய வம்சாவளி மக்களிடமும் அதிக ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது. பிரதம மந்திரியின் அமெரிக்க பயணம் உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை வெகுவாக கொண்டாடப்பட இருக்கிறது
இந்த பயணத்தின் மூலம் அமெரிக்கா மிக உயர்ந்த ராஜதந்திர அந்தஸ்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கியுள்ளது. அமெரிக்கா இந்த மரியாதையை இதுவரை மூன்று தலைவர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளது. இதன் அதிக மதிப்பாக நான்காவதாக இந்திய பிரதமருக்கு வழங்குகிறது. இந்த பயணத்தின் மூலம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகம் மிகவும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் 2014 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இந்த வர்த்தக சேவை இரட்டிப்பாகியுள்ளது. அதன் மூலம் இந்தியாவில் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டி மிகப் பெரிய வர்த்தக பங்களிப்பை அளித்துள்ளது.
இந்த பொருளாதார ஒத்துழைப்புடன், இந்தியா வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. உலக பொருளாதாரம் 2014இல் பலவீனமான இருந்தது. தற்பொழுது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த பயணத்தின் மூலம் இந்திய நாட்டிற்கு தேவையான பாதுகாப்பு தளவாடங்களை பெற இந்திய பிரதமர் ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. இந்த பயணத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, கலாச்சார தொடர்பு மற்றும் அங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்லெண்ண உறவுகளையும் மீட்டெடுக்கும் முயற்சியில் பாரத பிரதமர் இருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. அதே சமயம் வசுதைய்வ குடும்பகம் என்ற உணர்வில், இந்தியா உள்நாட்டு கோவிட்- 19 நிலைமையை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், தடுப்பூசி திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் உண்மையான இந்தியனாக பிரதிபலிக்க செய்தவர் இந்திய பிரதமர். கோவிட் பெருந்தொற்று உலகையே பெரிதளவில் பாதித்த பொழுது இந்தியா 180 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து, உலகில் சுமார் 100 நாடுகளுக்கு உதவியுள்ளது. உலகை கோவிட்- 19 தாக்கிய போது இந்தியாவும் அமெரிக்காவும் இந்த தொற்றுநோய் நெருக்கடியில் தவித்த உலக சமூகத்திற்கு உதவ முன்வந்த இரண்டு நாடுகளாக இருந்தன. இதில் பரஸ்பர மனிதாபிமானமும் பிரதிபலிக்க செய்தது. இந்தியாவும் அமெரிக்காவும் நேர்மையான உண்மையான பங்காளிகள் என்பது இப்போது வெளிப்பட்டிருக்கிறது. இந்திய அமெரிக்க உறவு முறை நீடித்த உறவாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றங்களை பொருட்படுத்தாமல் இந்த உறவை இணையற்ற வேகத்தில் செழிக்க வைத்தது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆழமான உண்மையான நேர்மையான தலைமையாக பிரதமர் நரேந்திர மோடி உருவாகியுள்ளார். இந்த அமெரிக்க பயணத்திற்கு பிறகு இந்தியா அமெரிக்க இடையேயான வலுவான பிணைப்பு உலகளாவிய மாற்றமாக மாறும் என்று தெரிகிறது.
ReplyForward |