இந்து முன்னணி கலை இலக்கியப் பிரிவு மாநில அமைப்பாளர் கனல்கண்ணன் கைதுசெய்ததை கண்டித்து நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட முயன்றனர் .
ஆனால் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தினர் இதனால் சலசலப்பு ஏற்பட்டது போலீசாரோடு ஏற்பட்ட பேச்சு வார்த்தைக்கு பின் மறியலை கைவிட்ட பிஜேபியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். .இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் . அரசு ராஜா (மாநில பொதுச் செயலாளர்), தங்க மனோகர் (நெல்லை கோட்ட தலைவர்), V. P ஜெயக்குமார் (மாநில துணைத்தலைவர்) மற்றும்.
பாஜக சார்பில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் ,மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துணை தலைவர் தேவ், மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு செயலாளர் சந்திரசேகர் , ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.