தேனி வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு பிரச்சாரம்!!

sen reporter
0


 தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படியும் தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அவரின் அறிவுறுத்தலின்படியும், தேனி மாவட்டம் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, 

மாணவிகளுக்கும் அதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சில் மாவட்ட அலுவலர் செ.வினோத், உதவி மாவட்ட அலுவலர் ரா.குமரேசன், ஜெ.ஜெயராணி, இவர்களுடன் பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க. பழனி,  நிலைய அலுவலர் போக்குவரத்து து.நாகராஜன் மற்றும் தேனி மாவட்ட கமாண்டோ வீரர்கள் கலந்து கொண்டு  விழிப்புணர்வு பிரச்சாரமும் செயல்முறை விளக்கமும் அளித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top