திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்!!!!

sen reporter
0


 திருவள்ளூர் மாவட்டம்

ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் ஆவடி பருத்திபட்டில் 16.09.2023 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், சங்கங்கள் மற்றும்  குடியிருப்போர்  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இதனை நிறைவேற்றும் விதமாக ஆவடி நேரு பஜார் சாலையில், சாலையோர கடைகள், வாகன நிறுத்தம், பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறு இருப்பதை நிவர்த்தி செய்யப்படும் விதமாக போக்குவரத்து துணை ஆணையாளர் திருமதி.ஜெயலட்சுமி, இ,கா,ப., அவர்களின் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் சாலையோர கடைகள், வாகன நிறுத்தம் 

ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி பொதுமக்கள் எளிதாக சென்று வர  போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொண்டனர். இப்பணிகளை இன்று 07.10.2023 ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top