டெல்லி: தலைநகருக்கு சிவப்பு எச்சரிக்கை! டிசம்பர் 31ம் தேதி வரை ஜாக்கிரதை!!

sen reporter
0



 டெல்லியில்,  கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் இன்று டெல்லியில்   வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.


வெள்ளிக்கிழமை காலை 4 மணி முதல் 10 வரை வரை, தில்லி -என்சிஆர் பகுதிகளில் வாகனப் போக்குவரத்தைத் தவிர்க்கமாறும், பின்னர் போக்குவரத்தை குறைக்கு மாறும் சிவப்பு எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


கடுமையான பனி மூட்டம் காரணமாக, எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், விபத்துகள் நிகழும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.


தலைநகரில் கடந்த சில நாள்களாக அதிகாலை வேளையில் மிகுந்த அடா் மூடுபனி நிலவி வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகள், ஹரியாணா, சண்டீகா், டெல்லி, தெற்கு ராஜஸ்தான் மற்றும் வடக்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் அடா் மற்றும் மிகவும் அடா் மூடுபனி இருந்தது. 


இதன் காரணமாக காண்புதிறன் 25 மீட்டராகக் குறைந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


குறிப்பாக பாட்டியாலா, அம்பாலா, சண்டீகா், ஹரியாணா, டெல்லி, பாலம், பரேய்லி, லக்னெள், வாரணாசி மற்றும் குவாலியா் உள்ளிட்ட இடங்களில் காண்புதிறன் 30 மீட்டருக்கும் குறைவாக இருந்தது. 


இதைத் தொடா்ந்து, டெல்லி ரயில் நிலையங்களுக்கு வர வேண்டிய 22ற்கும் மேற்பட்ட ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது.


இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 31) வரையிலும் ஹரியாணா, சண்டீகா், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் காலை வேளைகளில் மிகுந்தஅடா் மூடுபனி இருக்கும். 


எனவே, வாகன ஓட்டுநா்கள் மிகவும் ஜாக்கிரதையுடன் வாகனங்களை இயக்கும்படியும், விமானங்கள், ரயில்கள், பேருந்து பயணங்களுக்கு முன்பாக வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொண்டு எந்த விதமான போக்குவரத்து முறையையும் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top