பழனி: திண்டுக்கல் மாவட்டம்: பழனி பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு ரசீது? மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு தகவல்!

sen reporter
0


பழனி முருகன் கோயிலில் பணம் பெற்று பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு ரசீது தராததால் அதிக விலைக்கும், அளவு குறைவாகவும் சிலர் விற்பனை செய்து வருவதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பினால் வியாபாரிகள் வாக்குவாதம் செய்வதாகவும் பக்தர்கள் கூறிவந்தனர்.


இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம்.சுந்தர், நீதிபதி சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்போது பழனி முருகன் கோயிலிலும் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சமிர்தத்திற்கு ரசீது வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தொடர்ந்து முறையான ரசீது வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top