கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2ம் தேதி
சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக
தமிழ் நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் விருசம்பட்டி எம்.சங்கர், கூறியதாவது,
காலநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கிடவும்,
வி. ஏ. ஓ.,க்களுக்கு நடத்துவது போல 3 ஆண் டுகளுக்கு ஒரு முறை வட்டாரத்திற்குள்ளேயே கவுன்சிலிங் நடத்தவும், கொரோனா பணியாற்றிய பணியாளர்கள், காலத்தில் ஊராட்சி செயலர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டும் வழங்க வில்லை.
ஊராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதை மாற்றி காலமுறை ஊதியம் வழங்கவும்,
பணிக் கொடை ஒரு லட்சம், ஓய்வூதியம் 5 ஆயிரம் ரூபாய் கருவூலம் மூலம் வழங்கவும், ஊராட்சி செயலர்களின் பணி காலத்தினை கருத்தில் கொண்டு தேர்வு செய்து
அதனை வழங்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைககளை வலியுறுத்தி பிப்ரவரி 2ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகம் முன் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில்
பெருந்திரள் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.
.jpg)