இலங்கை: தொடர்கிறது தொந்தரவு! தமிழகத்தின் பத்து மீனவர்கள் யாழ் சிறையில்!!

sen reporter
0


 எல்லை தாண்டி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேருக்கும் பருத்தித்துறை நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பருத்த்திதுறை கடற்பரப்பில் வைத்து ஒரு படகுடன் அதில் பயணம் செய்த 10 தமிழக மீனவர்கள் இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.


குறித்த மீனவர்களை யாழ் மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையின் ஒப்படைத்துள்ளனர். மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.


 நீரியல்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று முற்படுத்தினர்.


வழக்கை விசாரணை செய்த பருத்தித்துறை பதில் நீதவான் பா.பாலசுபரபிரமணியம் சந்தேகநபர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


இதையடுத்து 10 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top