தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி: கோவில்பட்டியில் பரபரப்பும் பதற்றமும்!? மனைவியைக் கொலை செய்த கணவர்? அடுத்ததாக உறவினரையும் கொலை செய்ய முயன்ற துணிகரம்!

sen reporter
0



 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இன்னாசி முத்து (63). இவரது மனைவி மருதம்மாள் (53). இவர்களது மகள் விமலா, சென்னையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.


இன்னாசி முத்துவுக்கும், மருதம்மாளுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த இன்னாசி முத்து, தனது மனைவி மருதம்மாளை வீட்டுக்குள் வைத்து கை, கால், முகம், என உடலின் பல்வேறு பாகங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, இரவு முழுவதும் அங்கேயே பதுங்கி இருந்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, காலையில் வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் மருதம்மாள் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. 


உறவினர் சின்ன மருது என்பவர், வீட்டின் வாசல் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, உள்ளே பதுங்கி இருந்த இன்னாசி முத்து, உறவினர் சின்ன மருதுவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். 


இதில் நிலைகுலைந்த சின்ன மருது, அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, காயம் அடைந்த சின்ன மருதுவை மீட்டு, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட மருதம்மாளின் சடலத்தை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலையாளி இன்னாசி முத்துவை தேடி வந்தனர். 


இந்த நிலையில் கொலையாளி இன்னாசி முத்து, தற்கொலைக்கு முயன்ற நிலையில், அங்குள்ள காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து அவரை மீட்ட காவல் துறையினர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.


மனைவி மருதம்மாளை வெட்டி கொலை செய்துவிட்டு, கணவர் இன்னாசிமுத்து இரவு முழுவதும் வீட்டுக்குள் பதுங்கி இருந்த சம்பவமும், அடுத்த நாள் காலையில் உறவினர் சின்ன மருதுவை வெட்டிவிட்டு தப்பி ஓடி தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் பாண்டவர்மங்கலம் பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top