தேனி: தேனி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் புறப்பாடு நிகழ்ச்சி! மூன்று தெய்வங்களும் ஒன்றிணைந்து முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா!!

sen reporter
0

தைத்திங்கள் முதல் நாளை முன்னிட்டு இன்று தேனி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 


தேனி அல்லிநகரம் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 


இந்த கோயிலில் தைத்திங்கள் முதல் நாளை முன்னிட்டு உற்சவர் ஆண்டாள் நாச்சியாருக்கு வண்ண பட்டு உடுத்தி ஆபரணங்கள் அணிவித்து மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சப்பரத்தில் அமர வைத்து புறப்பாடுக்கு தயார் செய்தனர். 


முன்னதாக ஆண்டாளை அழைத்துச் செல்ல, கௌமாரியம்மன் கோயிலில் இருந்து மாரியம்மன் மற்றும் வீரப்பயனார் கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் அமர்ந்திருக்கும் உற்சவரான அய்யனாரும் முக்கிய வீதிகள் வழியாக வந்து வரதராஜ பெருமாள் கோயிலை அடைந்தனர்.


அங்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் ஆண்டாள் நாச்சியாரை அழைத்துக் கொண்டு மூன்று தெய்வங்களும் ஒன்றிணைந்து முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர்.


நிகழ்வில் வழிநெடுக ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, மூன்று தெய்வங்களையும் கண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top