திருச்செந்தூர்: தைப் பொங்கல்: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

sen reporter
0


 தைப் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூா் கோயிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை 1ம் தேதி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். தைப் பொங்கலை முன்னிட்டு, இன்று (ஜன.15) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. 


இதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தா்கள் வசதிக்காக பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பக்தா்களுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top