அனைத்து அரசுப் பள்ளிகளிலும் துப்புரவுப் பணியை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்திரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா, வேலூர் மாநகராட்சி 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் தலைமையில்
வேலூர் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள், பகுதி மேற்பார்வையாளர் மதிவாணன் குழுவினர் துப்புரவுப் பணியை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது மாநகராட்சி உறுப்பினர்கள் சித்ரா லோகநாதன், சித்ரா மகேந்திரன், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் விமலா, துணைத்தலைவர் கௌதமி, பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள் எம்.மாரிமுத்து, கே.திருமொழி, பி.ரோசலின் பொன்னி ஆகியோர் உடனிருந்தனர்.
பள்ளி வளாகத்தில் இருந்த குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டன. மாணவியர்கள் உபயோகிக்கும் கழிவறைகள் முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியினையும் மேற்கொண்டனர்.
