கோவை சாரல் மழையில் நனைந்த படியே தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்திய காட்டுயானைகள்
கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் சாரல் மழையில் நனைந்த படியே தண்ணீர் அருந்திய காட்டுயானைகள்.இந்த ஊரில் விலங்குகள் பறவைகள் தண்ணீர் அருந்துவதற்காக ஊர் எல்லையில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு தண்ணீர் நிரப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று அங்கு குட்டியானைகளுடன் வந்த 5க்கும் மேற்பட்ட யானைகள் அந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி சென்றன.அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.