நேற்று சம்மனை பெற்றுக் கொண்ட மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி அலுவலகத்தில் தனக்கு பத்து நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தார்.
கடிதம் எழுதியும் கொடுத்திருந்தார்.ஆனால் இன்று காலை 9 மணி அளவில் சென்னை கோவை சேர்ந்த சிபிசிஐடி அதிகாரிகள் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.அவர்கள் கேட்ட அனைத்து விசாரணைக்கும் தகுந்த பதில் கொடுத்திருப்பதாகவும் 9 மணியிலிருந்து 11 மணி வரை விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து எஸ்.ஆர்.சேகர் பேசும்போது தற்போதுள்ள தமிழக அரசின் பழிவாங்கும் முயற்சியாகவும் பாஜகவிற்கு கலங்கத்தை ஏற்பட்டும் முயற்சியாகவும் காவல்துறையை ஏவி விட்டுள்ளதாக தெரிவித்தார்.தனக்கும் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட விசாரணைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக கூறியுள்ளதாக செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.