வேலூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்:மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் டிகேஎம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து தனியார் நிறுவனத்திற்கு தேர்வான வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மண்டலக் குழுத்தலைவர் கே.யூசுப்கான், வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குநர் காந்தி, அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.