வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !

sen reporter
0


வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது .கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் தி .அ.முகமது சகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் ,அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி. நந்தகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் .வேலூர் மாநகர செயலாளர் எம்எல்ஏ ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, முன்னாள் எம்எல்ஏ சி. ஞானசேகரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக இளைஞர்களின் எதிர்கால வாழ்வாதாரம் மேம்படவும் வரும் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்று தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வர இருக்கும் வகையில் பயணம் மேற்கொள்ளும் கட்சியின் தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பயணம் வெற்றி பெறவும், தொழில் முதலீடுகள் தமிழகத்தில் குவிந்திடவும், வேலூர் மாவட்ட திமுக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஆண்டிற்கான முப்பெரும் விழா கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவிக்கும் தேதியில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் அதிக அளவில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top