வேலூர் :வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

sen reporter
0

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெறுவதாகவும், பொதுமக்கள் புதிய விண்ணப்பங்களை அளிக்கலாம் எனவும் வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் பரப்பி வரப்படுகின்றது. இது உண்மைக்கு மாறானது. எனவே இச்செய்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு யாரும் வருகை தர வேண்டாம் என்றும் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி விடுத்துள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top