தென்காசி: முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

sen reporter
0

அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களாக மர்ம காய்ச்சல்  மற்றும் மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது.தென்காசி மாவட்டம் தென்காசி தாலுகா ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களாக மர்ம காய்ச்சல்  மற்றும் மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது.இதனால் தற்போது வரை தென்காசி அரசு மருத்துவமனையில் 13 பேரும்  நெல்லை அரசு மருத்துவமனையில் மூன்று பேரும் என மொத்தம் 16 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சை பெற்று வரும் 16 பேரில் பெரும்பாலானோர் ஆழ்வார்குறிச்சியில் செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பரிசோதனை ரிப்போர்ட்டில் சுகாதாரம் இல்லாத குடிநீர் பருகியதால் ஏற்பட்ட விளைவு என்பது போல் நோயாளிகளின் புகார் உள்ளது.. 

ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீரீல் சாக்கடை கலந்துள்ளதாக பொதுமக்கள் புகார் இருந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.. 

இந்நிலையில் இதுவரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோய் தடுப்பதற்கான முதற்கட்ட பணிகளை  கூட இன்னும் துவங்கவில்லை.பொது மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களோ, குடிநீர் தொட்டி சுத்தம் செய்யும் வேலையோ, கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கையோ, இதுவரை துவங்கப்படவில்லை

இன்னும் பல தெருக்களில் சாக்கடைகளும், மழைநீரும் சீர் செய்யப்படாமல் தேங்கி நின்று நோய் தொற்று ஏற்படும் அபாயம் தான் ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ளது.ஆகையால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு அவசரகால அடிப்படையில் நோய் தடுப்புக்கான குழுவினை அனுப்பி சீர் செய்து பொதுமக்கள் நலன் காத்திடுமாறு...  கோரிக்கை விடுத்துள்ளார்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top