வேலூர்: காட்பாடியில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாப பலி!
9/18/2024
0
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்தீப் கிருஷ்ணன் (30). இவர் கேரளாவில் இருந்து சம்பல்பூருக்கு தன்பாத் அதிவிரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த ரயில் காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அதே ரயிலில் சிக்கி அவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை காட்பாடி ரயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காட்பாடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
