மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், வடகிழக்குப் பருவமழையினை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு ஆய்வு!!!!
10/13/2024
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் தயார்நிலையில்வைக்கப்பட்டுள்ள பணிகளை ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 1913 கட்டுப்பாட்டு மையத்தில்பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாருக்கு பதிலளித்து, அதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்குஅறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு. மகேஷ் குமார் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள், சிறப்புத்திட்டச்செயலாக்கத்துறை செயலாளர் டாக்டர் தாரேஷ் அகமது, இ.ஆ.ப., அவர்கள், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
