திருப்பூர். காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளையின் உலக சாதனை!!!

sen reporter
0

பெருமாநல்லூர் எம் எல் ஆர் திருமண மண்டபத்தில் கொங்கு மண்ணின் பாரம்பரிய கலைகளில் ஒன்று வள்ளி கும்மி ஆட்டம்இந்தக் கலையானது தற்போது மெல்ல மெல்ல

 அழிந்து வருகின்ற கலைகளில் ஒன்றுஅதனை மீட்டெடுக்கும் விதமாக உலக சாதனை நிகழ்ச்சியை காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளையினர் முயற்சி மேற்கொண்டார்கள்

 அதை நிறைவேற்றும் விதமாக திருப்பூரைச் சுற்றி பல பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களை அரங்கேற்றமும் செய்து வந்தார்கள் இறுதியாக 26 27 ஆவது பயிற்சியாளர்களைக் கொண்டு அரங்கேற்றம் மற்றும் உலக சாதனை  மாலை 4.30 மணிக்குதுவங்கி நிகழ்வு 7மணி நேரம் 7 நிமிடம் 7 வினாடி என்கின்ற முறையில் 333

 நடன கலைஞர்களைக் கொண்டு அரங்கேற்றம்நடைபெற்றது இந்நிகழ்வை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நடனமாடியும் நிகழ்வை தொடங்கி வைத்தார் 

 மேலும் நிகழ்ச்சியை காண்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி அவர்களும்திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கார் செல்வராஜ் அவர்களும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி அவர்களும் பாரதிய ஜனதா கட்சியின் கோட்ட பொறுப்பாளர் பாலகுமார் அவர்கள் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் அவர்களும் சாந்தாமணி வேலுச்சாமி அவர்களும் கலந்து கொண்டார்கள்இந்த உலக சாதனை  அரங்கேற்ற நிகழ்வை இன்டர்நேஷனல் பிரைட் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு நிறுவனர் டாக்டர் பிரதீப் அவர்கள்

 அழகு வள்ளி கலைக்குழுவின் ஆசிரியர்கள்திரு ராசு மூத்த ஆசிரியர் திரு பாபு அவர்கள் மற்றும்கலைக்குழுவைச் சார்ந்த ஆசிரியர்கள் பலரும் இணைந்து தொடர்ந்து ஏழு மணி நேரம் ஏழு நிமிடம் ஏழு வினாடிகள் என்று சிறப்பாக நடத்தி அனைவருக்கும் சான்றிதழும் பரிசுப் பொருட்களும் வழங்கி சிறப்பித்தார் செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி அவர்கள்விழாஏற்பாட்டைஅறக்கட்டளை தலைவர் செல்வராஜ் செயலாளர் பா குமார் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் திருவேங்கடம் மகேஸ்வரி ஆடிட்டர் தண்டபாணி அவர்கள் கலந்து கொண்டார்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top