இந்தியா போஸ்ட்-ல் போதைப் பொருட்கள் வந்தது தொடர்பாக அஞ்சல் துறையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இது போன்ற போதைப் பொருட்கள் வருவதை தடுப்பதற்கு அஞ்சல் துறையின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.கோவை மாநகர காவல் (தெற்கு) துணை ஆணையர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படையினர், போதை மாத்திரைகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறிய காவல் ஆணையர், ஏற்கனவே கர்நாடகாவில் இருந்து கோவைக்கு வந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்தவர்களை கைது செய்த பிறகு கர்நாடகாவில் இருந்து போதை மாத்திரை வருவது நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து, ஹரியானாவில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்களையும் கைது செய்திருப்பதாகவும் கூறினார். மேலும், கேரள மாநிலம் மன்னார்காடு, பாலக்காடு பகுதிகளில் இருந்து போலி மருந்து சீட்டு மூலமாக மாத்திரைகள் வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்ததில் 4 நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.இந்நிலையில் , ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் கோவை ரயில் நிலையத்திற்குகொண்டுவரப்பட்டபோதைக்காகபயன்படுத்தப்படும் 7,800 வலி நிவாரண மாத்திரைகளை கோவை மாநகர காவல் தனிப்படையினர் பறிமுதல் செய்ததாகவும் இதில் தற்போது மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் கோவை மாநகர காவல்துறை ஈடுபட்டு வருவதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு போதைப் பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
கோவை மாநகர மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரியை முழுமையாக ஒழிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கடந்த மூன்று மாதங்களுக்குள் லாட்டரி தொடர்பாக ஆறு வழக்குகள் பதியப்பட்டதாகவும் 45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதில் 27 நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
2024-ம் ஆண்டு மட்டும் 93 கோடி ரூபாய் சைபர் குற்றங்கள் மூலம் மோசடிசெய்யப்பட்டிருப்பதாகவும் இதில் சுமார் 50 கோடி ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தொகை நீதிமன்ற உத்தரவின் படி, பணத்தை இழந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கோவை மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி தலைமையில் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். முதன்முறையாக குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள், தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்டால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, பயிற்சி பெற்ற காவல் அதிகாரிகள் மூலம் ஆலோசனை வழங்கப்படுவதாகவும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

