கிருஷ்ணகிரிமாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது மத்தூர் To கிருஷ்ணகிரி ரோட்டில் TN 24 பேக்கரி முன்பு லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களில் ஒரு நபர் போலீசாரை பார்த்து தப்பி ஓடிவிட்டதாகவும் மற்ற ஒரு நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள்,₹300/- ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
