இந்த பேரணியானது , காஸ்மோ கிளப் வளாகத்தில் இருந்து தொடங்கி லட்சுமி மில்ஸ் உள்ள லூலூ மால் வளாகத்தில் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.கோயம்புத்தூர் விழாவின் 17வது பதிப்பு, தலைவர் திரு.அருண் செந்தில்நாதன், இணைத் தலைவர்கள் திருமதி.சௌமியா காயத்திரி மற்றும் திருமதி.சரிதா லட்சுமி, மற்றும் விண்டேஜ் கார் பேரணி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.கனகராஜ் ஆகியோர் இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்தனர்.கண்காட்சியில் கோவை, பல்லடம், திருப்பூர், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சிப்படுத்தினர். கண்காட்சியில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் இடம்பெற்றுள்ளன.
சாலைவிதிகளைபின்பற்றுவதை விழிப்புணர்வாக கொண்டு இந்த பேரணி நடைபெற்றது. ஓல்ட் கிளாசிக் மற்றும் மாடர்ன் எக்ஸோடிக்ஸ் உள்ளிட்ட 40 கார்கள் வைக்கப்பட்டு கோவையின் முக்கிய சாலைகள் மற்றும்இடங்கள்வழியாகசென்றது.1931முதல்1980ஆம்ஆண்டு வரையுள்ளசுதந்திரத்துக்குமுன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள்பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன பழைய மாடல் பென்ஸ், ரோஸ் ரோல்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர் வோக்ஸ்வேகன் கார்கள் பழைய ஜீப் உள்ளிட்டவைஇடம்பெற்றுள்ளன. 1960ஆம்ஆண்டுஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சவர்வட் வகை கார் அந்த காலத்திலேயே ஆட்டோமேட்டிக் கியர் கொண்டது. இடதுபுறம் ஸ்டீயரிங் கொண்ட கார் அனைவரையும் கவர்ந்தது.இந்த நிகழ்ச்சியில் 60 வருட பழமையான பார்ப்பதற்கு அரிய கார்கள் காட்சிப்பட்டு இருந்ததை குழந்தைகள், பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.

