பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் வழிப்பாதை மீண்டும் அடைப்பு, பொதுமக்கள் அவதிஎம்எல்ஏ ஜெயராமன் தலைமையில் சாலை மறியல்!!!

sen reporter
0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்கு  உட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியில் கோவை பொள்ளாச்சி ரயில்வே இருப்பு பாதை உள்ளது இங்கு ரயில் சென்று வரும் நேரங்களில் கேட் மூடப்பட்டு பின்பு வாகனங்கள் செல்ல கேட் திறக்கப்படும் இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் மீண்டும் ரயில்வே கேட் அடக்க அறிவிப்பு வெளியான நிலையில் பொள்ளாச்சி நகர அதிமுக.சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்,ஆர்ப்பாட்டத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கூலி தொழிலாளர்கள் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சுற்றளவு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

இருப்புப் பாதையின் இருபுறமும் வடுகபாளையம் தாவளம் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன அத்தியாவசிய தேவைக்காக மருத்துவமனைக்கு கூட உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ரயில்வே கேட் மூடப்படும் எனும் அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் ரயில்வே கேட் வழியாக பொதுமக்கள் சென்றுவர வழிவகுக்க வேண்டும் கூறி அதிமுக வின்னர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்,இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top