திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் குஞ்சனம்பட்டி விவேகானந்தா பப்ளிக் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கத்தா, டீம் கத்தா, குமித்தே உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில்
விவேகானந்த பப்ளிக் பள்ளி மாணவர்கள் 38 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதலிடம். இரண்டாம் இடம். மற்றும் மூன்றாம் இடம் வெற்றி பெற்றனர். விவேகானந்தா பப்ளிக் பள்ளி, குஞ்சனம்பட்டி மாணவர்கள் அனைவரும் பிடித்தனர்.இவர்களுக்கு பள்ளியின் தாளாளர் கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினர்.