கோவையில் நடைபெற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்!!!

sen reporter
0

கோவைகதிர்நாயக்கன் பாளையத்தில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை கதிர்நாயக்கன்பாளையம் வார்டு உறுப்பினர் ராஜாமணி தொடங்கி வைத்தார் . பி.பி.ஜி கல்வியியல் கல்லுாரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா டயாபடிக் கேர் மற்றும் குருடம்பாளையம் ஊராட்சி இணைந்து முகாமை நடத்தினர் . இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வராடயாபடிக்கேர் மருத்துவமனையின் தலைவர் பிரசன்னா சர்க்கரை நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விவரித்தார்.உணவு உடற்பயிற்சி மருந்துகள் மற்றும்கண்காணிப்பு ஆகியவை நான்கு துாண்களாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறினார் . இந்த முகாமிற்கு வருகை தந்த 150 பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ அறிவுரைகளும் , மருந்துகளும் மருத்துவரால் வழங்கப்பட்டது . இதில் பி.பி.ஜி ஆப்டொமெட்ரி மாணவர்கள் கண்பரிசோதனை செய்தனர் . இதில் பி.பி.ஜி கல்வியியல் கல்லுாரி ஆசிரியர்களும் , மாணவர்களும் கலந்துகொண்டனர் .

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top