கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் சமூக வலைதளம் மூலம் நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி செய்த மதுரை வாலிபர் கைது!!!

sen reporter
0

கோவைமாவட்டம்கிணத்துக்கடவு பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் விசாரித்தபோது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால்  சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை கிணத்துக்கடவு போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தென்னரசு வயது (22) என்பதும், அவர் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் ஒரு செல்போனும், ஒரு பிரிண்டர் மெஷின் இருந்துள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்த போலீசார் அந்த வாலிபரின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் கேரளா லாட்டரி 3 மற்றும் 4 இலக்க எண்களை காண்பித்து லாட்டரி வேண்டுமென்றால் உறுப்பினராக  சேர வேண்டும் அப்போதுதான் டிக்கெட் கிடைக்கும் என வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கேரளா லாட்டரி ஏஜென்சி என போலியான விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஆன்லைன் மூலம் ஏமாற்றி மோசடி செய்ததும்,

 3 மற்றும் 4 எண்களை கொண்ட போலி லாட்டரியை கொடுத்து பணம் வாங்கி  திருப்பி அவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த வாலிபர் மீது மதுரை மாவட்டத்தில் கருப்பாயூரணி, பெருங்குடி, சிலைமான் ஆகிய 3போலீஸ் நிலையங்களில் ஆன்லைன் லாட்டரி மோசடி செய்ததாக வழக்கு பதிவாகியுள்ளதும் தெரிய வந்தது.இதனையடுத்து  போலீசார் தென்னரசு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top