வேலூர்: பொதுவழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் மனு!!!

sen reporter
0

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் த/பெ. குப்பன் அவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். மேலும் பிச்சாண்டி (வயது 65) த/பெ முத்தையன், தசரதன் (வயது 60) த/பெ.மாசிலாமணி இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இரண்டு பேரும் 5 மீட்டர் மற்றும் நான்கு மீட்டர் அளவுள்ள பொதுமக்கள் நடமாடும் பொது தெருவழி வீதிகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு தென்னை மரம் புங்கமரம் மற்றும் பூச்செடிகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டு செல்வதற்குவழி விடாமல் ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்து வருகின்றனர். இதுகுறித்து தாமோதரன் என்பவர் அவ்வழியாக வந்துள்ள அவர் வழி மூடி இருந்தனர் ஏன் என்று கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசி உன்னை ஒழித்து விடுவேன் நீ யாரிடம் போய் சொன்னாலும் என்னை ஒன்னும் செய்ய முடியாது என்றுபேசி மிரட்டி வருகிறார்.  இதுகுறித்து கடந்த  திங்கட்கிழமை அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கதிறி அழுதபடி கோரிக்கை மனுவாக எழுதி கொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனு மீது விசாரணை செய்துநடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதியவர் சுமார் ஐந்து ஆண்டு காலமாக கோரிக்கை மனுக்களை கொடுத்து வருவதும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இக்குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top