கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சமையலறை முழுவதும் கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு அறை முழுவதும் பரவி இருந்தது.அப்போது கியாஸ் கசிவு காரணமாக சங்கீதாவின் சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் தீ பரவியது. சங்கீதா வலி தாங்க முடியாமல் அலறி சமையலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதனைக் கண்ட அவரது கணவர் சேகர் மனைவியை காப்பாற்ற முயன்றார். அவரது உடலிலும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
கூச்சலிட்டபடியால் இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி காப்பாற்றி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சங்கீதாவுக்கு 100 சதவீத தீக்காயமும், அவரது கணவர் சேகருக்கு 50 சதவீத தீக்காயமும் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கீதா நேற்று காலை 9:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.

