தென்காசி:முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர் நியமனம் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்த முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்ம நாதனை முக்கூடல் பகுதி பொதுமக்கள் நேரில் சந்தித்து நன்றி கூறினர்!!!

sen reporter
0



 ஆலங்குளம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட முக்கூடல் பேரூராட்சி பகுதியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முக்கூடல் பேரூராட்சி பகுதி மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள, அரியநாயகிபுரம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு அரியநாயகிபுரம், தாளார்குளம், இலந்தைகுளம், அரசங்குளம் கிராம பொதுமக்களும்,  மயிலப்புரம் ஊராட்சி பகுதி பொதுமக்களும், பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அமர்நாத் காலனி மற்றும் சிவகாமிபுரம் ஆகிய பகுதி பொது மக்களும்பயன்படுத்தி வருகின்றனர்.30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக செயல்பட்டு வரும் இம்மருத்துவமனையில், இரவு நேரத்தில் பணிபுரிய போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாத நிலை உள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு வருவோர் மற்றும் பேறு காலத்திற்கு வருவோர் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலையுள்ளது.

எனவே  பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,  முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு நேர மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியமர்த்திட  வேண்டும் என முக்கூடல் பேரூராட்சி கவுன்சிலர் சிந்துஜா முத்துசாமி அளித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இக்கோரிக்கையை நிறை வேற்றிடும் வகையில்,  தற்போது அங்கு இரவு நேர மருத்துவ பணிக்காக டாக்டர் சாமுவேல்ராஜ் அவர்கள் நியமனம் செய்யட்டுள்ளார்.இந்நிலையில் தங்களது கோரிக்கையை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செய்து நிறைவேற்றித்தந்த முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ .சிவ பத்ம நாதனை , முக்கூடல் பே௹ராட்சி கவுன்சிலர் சிந்துஜா முத்துச் சாமி தலைமையில் பொதுமக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பொன்னரசு, வக்கீல் பர்வீன் ராம், முருகன், விஜய சேகர் முருகேசன் முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐயப்பன் கழக வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் இளைஞரணி அசோக், அருணா பாண்டியன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top