சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்டம் உலகசுற்றுச்சூழல்தினம்!!!
June 07, 2025
0
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரில் 129 ஆண்டுகளை கடந்து கல்விப்பணியாற்றி வரும் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய பசுமை படை, மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினமானது வெகு சிறப்பாக மாணவர்களிடையே கொண்டாடப்பட்டது . இந்நிகழ்வில் இயற்கை பசுமை குறித்த உறுதிமொழி மாணவ, மாணவிகள் எடுத்துக்கொண்டனர் , பசுமை பற்றிய ஓவிய போட்டிகள், மரக்கன்று நடும் நிகழ்வு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் டி.சீனிவாசன் தலைமையில், பள்ளி தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் கே. வாசுதேவன் மற்றும் பள்ளி சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் எஸ். ரமேஷ் ஆகியோர்கள் முன்னிலையில் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள எஸ். முரளீதரன், மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்வில் மூத்த முதுகலை ஆசிரியர் வி. முருகபாண்டியன், பட்டதாரி ஆசிரியர் பி. விஜயஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.