தூத்துக்குடியில் பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியறுவதால் சாலையில் ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!!!

sen reporter
0

தூத்துக்குடி மாநகரின் மத்திய பகுதியில் எட்டயபுரம் சாலை, ரஹ்மத்துல்லா புரம் பகுதியில் இன்று அதிகாலையில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய் உடைந்து குடிநீர் மளமளவென வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. இதனால் மழை வெள்ளம் போல் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இந்த குடிநீர் பைப் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்து மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கேட்டபோது மாநகராட்சி தரப்பில் யாரும் சாலையை தோண்டி பைப் லைன் வேலை செய்யவில்லை. யாரும் மர்ம நபர்கள் திருட்டு லைன் கொடுப்பதற்காக தோண்டப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top