கனல் கண்ணனை போலீசார் 8 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்தது சைபர்கிரைம்.

sen reporter
0

 அவதூறு வழக்கில் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்திற்கு  வந்த கனல் கண்ணனை போலீசார் 8 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்தது  சைபர்கிரைம்.



தமிழ் திரைப்படத்துறையின் பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன்.  இவர்இந்து முன்னணி  கலை இலக்கிய பிரிவு மாநில தலைவராக உள்ளார்.
 
 இவர்  சமூக வலைத்தளங்களில்
கிறிஸ்தவ மதத்தை பற்றி அவதூறு வீடியோ பதிவு செய்ததாக
  குமரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம்
அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். 

.விசாரணைக்கு வந்த நிலையில்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை  முடியாத நிலையில்  அவருக்கு தண்ணீர் உணவு வழங்கவில்லை என கூறி விசாரணையை போலீசார் அதிக நேரமாக இழுத்து அடிப்பதாவும் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்துமுன்னணி மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

 பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம்  கைவிடப்பட்டது இதனால் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் கனல் கண்ணனை சைபர் கிரைம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை செய்து கைது செய்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top