குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீடு இடிந்துவவிழுந்து மரணமடைந்த முதியவர் குடும்பத்திற்கு 5 மணி நேரத்திற்குள் நிவாரண தொகை ரூ. 4 லட்சத்தை முதலமைச்சர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது
தாழக்குடி மீனமங்கலம் பகுதியில் கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் வேலப்பன் என்பர் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடற்கூறாய்வு முடிவதற்கு முன்பே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் ₹4 இலட்சம் இழப்பீட்டுத் தொகையினை அவரது மனைவி பரமாயிடம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் .ரெ.மகேஷ் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் வழங்கினார்.
உடன் வருவாய் கோட்டாசியர் சேதுராமன், வட்டாட்சியர், வருவாய் துறை அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் சிவகுமார், கவுன்சிலர் முத்துலெட்சுமி உட்பட பலர் இருந்தனர்.
