சென்னை: தரைமேல் பிறக்க வைத்தாய்... எங்களை இலங்கையில் தவிக்கவிட்டாய்? இறைவா...

sen reporter
0


 வரவேற்பது, வரவேற்கதக்கதுதான்.....

ஒவ்வொரு நாளும் துயரத்தோடு...பயணிக்கும் எங்கள் கண்ணீரை துடைக்கப்போவது யார்?

மீண்டு வந்த மீனவர்கள் கேள்வி?


தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?

இல்லை... இது முடியாத தொடர் கதைதானா!


இலங்கை கடற்படையினரின் ஆதிக்க அட்டூளியம்?

மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் மனதிற்கு நிம்மதி தருவது எப்போது?

என்று தணியும் இந்த தொடர்கதை!


இலங்கைகடற்படையினரால்

 சிறை பிடிக்கப்பட்ட

 தமிழக மீனவர்கள் 38 பேரை 

நிபந்தனையுடன் மன்னார் நீதிமன்றம் விடுதலை 

செய்தது. 



 கடந்த 14ம்தேதி இராமேஸ்வரம் 

மீன்பிடித்துறைமுகத்தில் 

இருந்து 15 மீனவர்கள் கடலுக்குள் சென்ற போது 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.


கென்னடி பாஸ்கர் ஆகியோரது 

இரண்டு விசைப்படகுகள்,

அதில் இருந்த 15 மீனவர்களையும் 

கைது செய்தது 

பின்னர் மத்திய மாநில 

அரசின் ஏற்பாட்டில் 15 மீனவர்களும் 

 விடுதலை செய்யப்பட்டனர் .


 இன்றுகாலை இராமேஸ்வரம் மீனவர்கள் விமானம் மூலம்

சென்னை வந்தனர்.

அதிகாரிகள் வரவேற்றனர் 

பின்னர்  வாகனங்கள் மூலம் 

இராமேஸ்வரம் சென்றனர். 


மேலும் அக்டோபர் 

28 ம்தேதி 

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற

மெக்கான்ஸ் மரியசியா ராமகிருஷ்ணன்

ஆகியோருக்குச் சொந்தமான மூன்று 

விசைப்படகுகளையும்

அதில் இருந்த 23 மீனவர்களும் 

கைது செய்யப்பட்டனர்.


 பின்னர் 38 மீனவர்கள் மீது எல்லை தாண்டுதல்,

அனுமதியின்றி மீன்பிடித்தல் 

தடைசெய்யப்பட்ட

வலைககளைப் பயன் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் 

ஆஜர்படுத்தப்பட்டு சிறை சென்றனர்.


பின்னர் நிபந்தனையுடன் 38 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு இந்திய 

துணைத் தூதரக அதிகாரிகளிடம் 

ஒப்படைக்கப்பட்டனர்.


இவர்கள் மற்றும் ஐந்து நாட்களுக்கு முன்னர் 

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 

விரைவில் தமிழகம் 

வருகிறார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top